சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை வரும் பிப்ரவரி 2 ல் வெளியாகும் என கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் தெரிவித்துள்ளார் . சமீபத்தில் நாடு முழுவதுமுள்ள சிபிஎஸ்இ கல்வி நிறுவனங்களின் தலைவர்களுடனும் ,செயலாளர்களுடனும் அமைச்சர் காணொளி மூலம் கலந்தோசித்தது குறிப்பிடத்தக்கது .
கொரோன பொதுமுடக்கம் காரணமாக பள்ளி திறக்கப்படாததால் சிபிஎஸ்இ மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன .இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டிற்க்கான சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை வரும் பிப்ரவரி 2 ல் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது .இதனுடன் 45 ஆண்டு கால சிபிஎஸ்இ மாணவர்களின் ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும் எனவும் கூறப்படுகிறது .