
கொரோனா பெருந்தொற்று காரணமாக சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு இறுதித்தேர்வுகளை ரத்து செய்வது என மத்திய அரசு முடிவு எடுத்து அறிவித்தது. மேலும் மாணவர்கள் நலனையொட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.
இந்நிலையில் சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு மாணவர்களின் முடிவுகளை பொறுத்தமட்டில், நன்கு வரையறுக்கப்பட்ட புறநிலை அளவுகோலின்படி உரிய கால கட்டத்தில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை சி.பி.எஸ்.இ. மேற்கொள்ள வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண்கள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக 10, 11ஆம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களில் 30%, 12ஆம் வகுப்பில் நடந்த தேர்வில் 40% கொண்டு மதிப்பெண் கணக்கிடப்பட்டுள்ளது. இதன்படி, www.cbsc.nic.in என்ற இணையதளம் மூலமோ அல்லது அந்தந்த பள்ளிகளிலோ மதிப்பெண் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம்.