
2021 – 22 கல்வியாண்டில் இரண்டு பருவங்களாக சிபிஎஸ்இ பொதுத்தேர்வு நடைபெறும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதற்க்கான பிரத்யேக திட்டத்தை சிபிஎஸ்இ வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக அனைத்து பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டும்,ஒத்திவைக்கப்பட்டும் இருந்தது. மாணவர்களுக்கு பள்ளி பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடந்தது.கொரோனா பெருந்தொற்று காரணமாக 2020 – 21 கல்வியாண்டில் சிபிஎஸ்இ உட்பட பெரும்பாலான மாநிலங்களில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளின் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது 2021 – 22 கல்வியாண்டில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு பருவங்காளாக நடத்தப்பட உள்ளது.பொதுத் தேர்வானது நவம்பர் – டிசம்பரில் முதல் பருவமும், மார்ச் – ஏப்ரலில் இரண்டாவது பருவத் தேர்வும் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டத்தை இரண்டு பருவங்களுக்கு 50 – 50 சதவிகிதமாக பிரித்து வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.