
நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலையானது மிக தீவிரமடைந்து வருகிறது.இதனால் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர பொதுமுடக்கமானது படிப்படியாக அமல் படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய பல தரப்பினரிடமிருந்து கோரிக்கை வலுத்து வந்தன.
இதனைத்தொடர்ந்து மே 4 ஆம் தேதி நடக்கவிருந்த சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வானது ரத்து செய்யப்படுவதாகவும் மேலும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும் பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கமானது அதிகரித்து வருவதன் காரணமாக, சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பிரதமர் மோடி, கல்வித்துறை அதிகாரிகள், அரசியல் கட்சியினருடன் ஆலோசனை மேற்கொண்டார்.இதனைத் தொடர்ந்து மே 4 முதல் ஜூன் 14 வரை நடக்கவிருந்த சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்துசெய்யப்படுவதாகவும்,மேலும் மே 4 ஆம் தேதி தொடங்க இருந்த 12-ஆம் வகுப்பு தேர்வு தேதி குறிப்பிடமால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஜூன் 1ஆம் தேதி ஆய்வுக் கூட்டம் நடத்தி முடிவெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .