
இந்தியாவில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2021 – 2022ம் கல்வி ஆண்டிற்கான முதல் பருவத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று (18.10.2021) முதல் பருவத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியாக உள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்த நிலையில் மாணவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட நாடு முழுவதும் பள்ளிகள் திறந்து தற்போது 3 மாதங்கள் ஆகிவிட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது இரண்டாம் காலாண்டு நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மத்திய கல்வி வாரியம் (CBSE) 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது. தற்போது வகுப்புகள் வழக்கம் போல் நடைபெற்று வருவதால் மத்திய கல்வி வாரியம் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வை நவம்பர், டிசம்பர் மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த தேர்வுக்கான கால அட்டவணை அக்டோபர் 18ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி இன்று 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான முதல் பருவ பொதுத்தேர்வு கால அட்டவணை cbse.nic.in அல்லது cbseacademic.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியாகும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.