இன்று முதல் NEET தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்..

நாடு முழுவதும் செப்டம்பர் 12ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று அறிவித்திருந்தார்.மேலும் இன்று மாலை 5 மணி முதல் நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் நுழைவுத் தேர்வானது முன்னதாக 155 நகரங்களில் நடத்தப்பட்டு வந்த நிலையில் , தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இம்முறை 198 நகரங்களில் நீட்தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களை இன்று மாலை 5 மணிமுதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தவேண்டாம் என பல அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வந்தாலும், வரும் நீட் தேர்விற்கு தயாராகும்படி மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.மேலும் தமிழக அரசு நீட் தேர்வுக்கு விலக்கு பெறும்வரை மாணவர்களுக்கு பயிற்சி தொடர்ந்து அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Next Post

கொரோனா 3-வது அலை விரைவில் இந்தியாவை தாக்கும் அபாயம் - இந்திய மருத்துவர்கள் சங்கம் எச்சரிக்கை..

Tue Jul 13 , 2021
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை கட்டுக்குள் வந்துகொண்டிருக்கும் நிலையில் ,தற்போது கொரோனாவின் மூன்றாவது அலை விரைவில் இந்தியாவை தாக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் சங்கம் கவலை தெரிவித்ததோடு ,எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். சர்வதேச புள்ளிவிவரங்கள் படி , கொரோனா 3வது அலை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவும் ,எந்த நேரத்திலும் 3வது அலை இந்தியாவையும் தாக்கக் கூடும் என்று இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாட்டின் பல பகுதிகளில் கொரோனா […]
3rd-wave-covid19
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய