
இந்திய வம்சாவளியை சேர்ந்த பவ்யா லால் நாசாவின் செயல் தலைவராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார் .அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் வெற்றிக்கு பிறகு நாசா அணியில் பவ்யா லால் இடம்பெற்றார். இந்நிலையில் அவர் நாசாவின் செயல் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பவ்யா லால் அவர்கள் அணுசக்தி பொறியியலில் இளங்கலை மற்றும் மாஸ்டர் ஆஃப் சயின்ஸ் பட்டங்களையும், பின்னர் தொழில்நுட்பம் மற்றும் கொள்கையில் முதுகலை பட்டத்தையும் பெற்றுள்ளார் . மேலும் பொது கொள்கை மற்றும் பொது நிர்வாகத்தில் முனைவர் பட்டத்தை ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளார். அமெரிக்க வெள்ளை மாளிகை அலுவலகத்தில் ,பவ்யா லால் அவர்கள் 2005 முதல் 2020 வரை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கையின் ஆராய்ச்சி உறுப்பினராக பணிபுரிந்துள்ளார்.
விண்வெளித் துறையில் பவ்யாவின் சிறந்த பங்களிப்புக்காகவும் , விண்வெளி தொழில்நுட்பம் தொடர்பான துறையில் தொடர் ஆராய்ச்சிகளுக்காகவும் , பவ்யா லால் அவர்கள் செயல் தலைவருக்கு பரிந்துரைக்கப்பட்டார் என நாசா அமைப்பு குறிப்பிட்டுள்ளது.