பாரதியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டதால் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது.மேலும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் பாரதியார் பல்கலைக் கழகத்தில் இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு இணைய வழி மூலம் நடத்தப்பட்ட செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் இளங்கலை இறுதி ஆண்டு மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.தேர்வு முடிவுகளில் சில மாணவர்களுக்கு ஆப்சென்ட் என்று குறிப்பிடப்பட்டுள்ளது மாணவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து விளக்கமளித்த தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, விடைத்தாள்கள் முறையாக பதிவேற்றம் செய்யாத மாணவர்கள், போதிய வெளிச்சம் இல்லாமல் விடைத்தாளை புகைப்படம் எடுத்து பதிவேற்றிய மாணவர்களுக்கு, மதிப்பீடு செய்ய முடியாமல் ஆப்சென்ட் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்று விளக்கமளித்துள்ளார்.

Next Post

பிளஸ் 2 மாணவர்கள் பெயர்ப்பட்டியல் திருத்தம் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு - அரசுத் தேர்வுகள் இயக்கம் ..

Tue Jul 27 , 2021
பிளஸ் 2 பொதுத் தேர்விற்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள , அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அரசுத் தேர்வுத் துறையால் பலமுறை வாய்ப்பளிக்கப்பட்ட நிலையில் தற்போது மற்றுமொரு இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில் பிளஸ் 2 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக பள்ளிகல்வித் துறை அறிவித்தது. தற்போது சமீபத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான […]
plus-2-students
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய