அருப்புக்கோட்டை : அருள்மிகு லிங்கபைரவி தேவிக்கு நவராத்திரி விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு !!

அருள்மிகு லிங்கபைரவி தேவிக்கு நவராத்திரி 6 ஆம் நாளை முன்னிட்டு வியாழக்கிழமை இரவு சிறப்பு வழிபாடு நடைபெற்றது .அருப்புக்கோட்டை காந்தி நகரிலுள்ள ஈஷா யோகா மையக்கிளையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு லிங்கபைரவி தேவியின் திருஉருவப் படத்திற்கு மலர்மாலை மற்றும் வஸ்திரத்தால் அலங்காரங்கள் செய்யப்பட்டன .

அருள்மிகு லிங்கபைரவி தேவிக்கு நவராத்திரி 6 ஆம் நாளை முன்னிட்டு 11 வகையான அபிஷேக பொருட்களைக்கொண்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது .குங்குமம் ,சந்தனம், வெண்ணெய், எலுமிச்சைப்பழம் ,மஞ்சள் ,வேப்பிலை ,கண்ணாடி வளையல்கள் ,ஸ்ரீபலம்,மலர்கள் போன்ற பொருட்களை கொண்டு தேவிக்கு பூஜை செய்தும் மற்றும் சர்க்கரை பொங்கல் ,சுண்டல் போன்றவற்றை படைத்தும் வழிபாடானது நடைபெற்றது .

இறுதியில் அருள்மிகு லிங்கபைரவி தேவி பக்தர்களுக்கு காட்சியளித்தார் .வழிபாட்டில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அருள் பிரசாதம் வழங்கப்பட்டது .

Next Post

சிறப்பு அம்சங்களுடன் விரைவில் அறிமுகமாக இருக்கும் OnePlus Nord N10, Nord N100 ஸ்மார்ட்போன் !!

Fri Oct 23 , 2020
ஒன்பிளஸ் நிறுவனமானது இந்த ஆண்டில் அடுத்தடுத்த ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது .ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த பட்ஜெட் மாடலாக Nord 10 மற்றும் Nord 100 ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது .இது தொடர்பாக ஒன்பிளஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எந்தவித தகவலையும் வெளியிடவில்லை . இந்த ஸ்மார்ட்போன்களின் வெளியீடு ஆனது நவம்பர் மாதத்தில் வெளியாகும் என சில தகவல்கள் வந்துள்ளன.இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் எதிர்பார்ப்பதை விட முன்னரே அறிமுகமாகும் என்கிற தகவலும் […]
one-plus-nord-10-smartphone
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய