![](https://tamil.aptinfo.in/wp-content/uploads/2021/04/arrear-exams-conduct-online.jpg)
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றின் காரணமாக அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.இந்த அறிவிப்புக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்தது.தமிழக அரசின் அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில் பதிலளித்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில், பல்கலைக்கழக மானியக் குழு ஆகிய அமைப்புகள் ‘அரியா் தோ்வுகளை தமிழக அரசு ரத்து செய்தது விதிகளுக்கு முரணானது’ என தெரிவித்திருந்தன.மேலும் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்தது,இதில் தேர்வு நடத்தும் முறையை மேற்கொள்வது,தமிழகம் முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் வாரியாக எத்தனை மாணவா்கள் அரியா் தோ்வுக்கு விண்ணப்பித்தனா், எத்தனை மாணவா்கள் தோ்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டனா் என்பது குறித்து முழுமையான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில்,அடுத்த 8 வாரத்தில் அரியர் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மே மாதம் முதல் அரியர் தேர்வுகளை ஆன்லைனில் மூலம் நடத்த வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.