ராணுவ ஆள் சேர்ப்பு பொது நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு

சென்னை மாநிலக்கல்லூரியில் ஏப்.25 ஆம் தேதி அன்று நடக்கவிருந்த ராணுவ ஆள் சேர்ப்பு பொது நுழைவுத் தேர்வு, கொரோனா தொற்று பரவல் காரணமாக, தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ராணுவ ஆள்சேர்ப்பு தலைமை அலுவலகம் வெளியிட அறிக்கையில், இந்திய ராணுவத்தில், தொழில்நுட்பம், செவிலிய உதவியாளர், கிளார்க் உட்பட, ஆறு வகை பணிகளுக்கான ஆள்சேர்ப்பு முகாம் திருவண்ணாமலையில் உள்ள, அருணை இன்ஜினியரிங் கல்லுாரி வளாகத்தில் 2020 ஏப்ரல், 15 முதல், 25ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.கொரோனா ஊரடங்கு காரணமாக ஆள் சேர்ப்பு முகாம் ஒத்திவைக்கப்பட்டது.ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட ஆள் சேர்ப்பு முகாம்,நடப்பாண்டு பிப் 10 முதல் 26ம் தேதி வரை நடைபெற்றது.

தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியா முழுவதும் அதிவேகமாக பரவி வருகிறது.கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக ஏப்ரல் 25 ஆம் தேதி நடக்க இருந்த ராணுவ ஆள்சேர்ப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும்,தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,தேர்வு நடைபெறும் புதிய தேதி, http://www.joinindianarmy.nic.in என்ற, ராணுவ இணையதளத்தில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Next Post

இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கியது..

Wed Apr 21 , 2021
இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு இன்று புதிய உச்சத்தை அடைந்துள்ளது.ஒரே நாளில் புதிதாக 2,95,041 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களும் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,95,041 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 14.35 கோடியைத் தாண்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி, […]
corona-vaccine-in-india
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய