
நாடு முழுவதும் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை மற்றும் ஒருங்கிணைந்த படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்க்காக பொது நுழைவுத் தேர்வு (சியூசெட்) ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் மத்தியப் பல்கலைக்கழகங்களில் கல்லூரிப் படிப்பில் சேர நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வுத் தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.மேலும் இதற்கான விண்ணப்பப் பதிவும் தொடங்கப்பட்டுள்ளது.
2021-2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் முதல் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் முன்னதாக கூறியிருந்தது. இந்நிலையில், பொது நுழைவுத் தேர்வு செப்டம்பர் மாதம் 15, 16, 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது நுழைவுத் தேர்வானது 2 மணி நேரம் கணினி வழியில் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்குத் தவறான பதில் ஒன்றுக்கு 0.25 மதிப்பெண் குறைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. மத்தியப் பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்புவோர், தங்களுக்கு ஏற்ற படிப்புகளைத் தேர்வு செய்து செப்டம்பர் 2-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் விவரங்களை பெற cucet.nta.nic.in என்ற இணையதளத்தை அணுகலாம்.
பொதுநுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க : Admission-for-CUCET-Exam-2021