அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு ..

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தற்போது அதிதீவிரமடைந்து வருகிறது.இதன் காரணமாக நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு, முழு முடக்கம் போன்ற விதிமுறைகள் அந்தந்த மாநிலங்களில் விதிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் பாடங்களும், தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது.

கொரோனா எதிரொலி காரணமாக வரும் மே மாதம் 10ஆம் தேதி நடக்கவிருந்த ஐஐடி மெட்ராஸ் செமஸ்டர் தேர்வுகளும் மற்றும் மே 3ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனாவின் காரணமாக 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மற்றும் மே 10 முதல் கேந்திரியா வித்யாலய பள்ளிகளில் மாணவர்களுக்கான எழுத்துத் தேர்வுகளை நடத்த ஐஐடி மெட்ராஸ் திட்டமிட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.

Next Post

இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு : ஒரே நாளில் 3,79,257 பேருக்கு தொற்று உறுதி ..

Thu Apr 29 , 2021
இந்தியா முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.நாடு முழுவதும் தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.தினந்தோறும் கொரோனா தொற்றால் உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,79,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 3,79,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த […]
corona-test-in-india-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய