பொறியியல் பருவத் தேர்வு : தேர்வர்கள் புத்தகம் மற்றும் இணையத்தை பயன்படுத்தி விடையளிக்க அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி..

அண்ணா பல்கலைக் கழகம் நடப்பாண்டிற்கான ஏப்ரல் ,மே மாத பருவத் தேர்வினை ஆன்லைனில் நடத்த திட்டமிட்டுள்ளது.இந்நிலையில் தேர்வர்கள் புத்தகம் மற்றும் இணையத்தை பயன்படுத்தி விடையளிக்க அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது.

இதன்படி,அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் ,மே மாத பருவத் தேர்வுகள் இணைய வழியில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும்,மேலும் தேர்வுகள் புத்தகத்தை பார்த்து விடை எழுதும் வகையில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி,கேட்கப்படும் கேள்விகள் நேரடியாக புத்தகத்தில் இருக்காது எனவும்,விடைகளை புத்தகத்திலும் ,இணையத்திலும் தேடி ஆராய்ந்து விடையளிக்கும் வகையில் கேள்விகள் கேட்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

பருவத் தேர்வானது மொத்தம் 50 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.மேலும் ,5 கேள்விகளுக்கு தலா 2 மதிப்பெண்கள் மற்றும் 5 கேள்விகளுக்கு 8 மதிப்பெண்கள் என மொத்தம் 50 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். தேர்வர்கள் தேர்வில் மொத்தம் 12 பக்கங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.இந்தத் தேர்வானது ஒன்றரை மணி நேரம் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்வர்கள் தேர்வு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்தை தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம்.

Next Post

செவ்வாய்க்கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த முதல் ஹெலிகாப்டர் - நாசா வரலாற்று சாதனை..

Tue Apr 20 , 2021
செவ்வாய்க்கிரகத்தில், ‘இன்ஜெனியூனிட்டி’ ஹெலிகாப்டர் வெற்றிகரமாகப் பறந்ததாக நாசா அறிவித்துள்ளது. இதன்மூலம் வேற்று கிரகத்தில் முதன்முதலாக ஹெலிகாப்டரை இயக்கி வரலாற்று சாதனையை நாசா படைத்துள்ளது. நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பெர்சீவரன்ஸ் ரோவர் என்ற விண்கலத்தை செவ்வாய்க்கிரகத்திற்கு அனுப்பியது.இந்த விண்கலமானது செவாய்க்கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்திய கூறுகள் உள்ளனவா,மேலும் உயிர் வாழ்ந்த தடயங்கள் உள்ளனவா என்று ஆராய்ச்சி செய்வதற்கு அனுப்பப்பட்டது. இந்த விண்கலமானது செவ்வாய் கிரகத்தில் […]
nasa-helicopter-ingunity
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய