
அண்ணா பல்கலைக்கழக முதுகலை, இளங்கலை பொறியியல் பட்டபடிப்புகளுக்கு ஜூன் 14ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடைபெரும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 35 ஆயிரத்தை கடந்து வருவதால், மாணவர்களுக்கு கல்லூரிகளை திறந்து தேர்வு நடத்துவது என்பது கடினமான காரியம் என்பதால், மாணவர்கள் நலன் கருதி ஆன்லைன் மூலமாக மட்டுமே தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017 ஒழுங்குமுறைப்படி அண்ணா பல்கலைக்கழக முதுகலை, இளங்கலை பொறியியல் பட்டபடிப்புகளுக்கு ஜூன் 14ம் தேதி முதல் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் மற்ற மாணவர்களுக்கான(ரெகுலேஷன்) தேர்வுகள் ஜூன் 21ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . கடந்த முறை தேர்வு எழுதாமலும், கட்டணம் செலுத்தாமல் உள்ள மாணவர்கள் ஜூன் 3ம் தேதிக்குள் கட்டணம் செலுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.