
கொரோனா தொற்றின் காரணமாக புதுச்சேரியில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் .
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன .பின்னர் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்த நிலையில் ,பல கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு பள்ளிகள் அக்டோபர் 8ம் தேதி முதல் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு, தனியார் மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகள் திறக்கப்பட்டன.
தற்போது, நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், 2020 – 2021ம் கல்வியாண்டில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் அனைத்து பகுதிகளிலும் 1 முதல் 9 வரையிலான வகுப்புகளின் மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்கலில் 10 மற்றும் 11 வகுப்பு மாணவர்கள் தமிழக வாரியத்தின் வழிகாட்டுதலின்படி தேர்ச்சி பெறுவார்கள். மகே மற்றும் யானம் பிராந்தியங்களைச் சேர்ந்த 10 மற்றும் 11 ம் வகுப்பு மாணவர்கள் முறையே கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேச வாரியங்களின் வழிகாட்டுதலின் படி தேர்ச்சி பெறுவார்கள் என ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.