அரசு கவின் கலைக் கல்லூரிகளில் மாணவர் சோ்க்கை..

தமிழகத்தில் அரசு கவின் கலைக் கல்லூரிகளில் சேர்வதற்கு , வரும் 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் சென்னை, கும்பகோணம் ஆகிய இடங்களில் கவின் கலைக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

அரசு கவின் கலைக் கல்லூரியில் காட்சித் தொடா்பு வடிவமைப்பு, வண்ணக்கலை, சிற்பக்கலை, ஆலையக சுடுமண் வடிவமைப்பு, ஆலையக துகிலியல் வடிவமைப்பு, பதிப்போவியம் ஆகிய படிப்புகள் உள்ளன.இந்த படிப்புகள் நான்காண்டு இளங்கலை மற்றும் இரண்டாண்டு முதுகலை படிப்புகளாக கற்பிக்கப்படுகின்றன.

மேலும் விண்ணப்பங்கள் மற்றும் தகுதிகள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.50 , மற்ற பிரிவினர்களுக்கு ரூ.100 விண்ணப்பக் கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு, 044 2561 0878, 0435 248 1371 ஆகிய தொலைபேசி எண்களை அணுகலாம்.

Next Post

பாராலிம்பிக் போட்டி : வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் பிரவீன்குமார்..

Fri Sep 3 , 2021
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், இன்று நடந்த உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் பிரவீன்குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார். பிரிட்டன் வீரருடன் கடும் போட்டி நிலவிய நிலையில் 2.07 மீட்டர் உயரம் தாண்டி பிரவீன்குமார் வெள்ளி வென்று சாதனை படைத்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த 18 வயதே ஆன பிரவீன்குமார் டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் பங்குப்பெற்று வெள்ளிப்பதக்கம் பெற்று இந்தியாவிற்கு […]
paralymbic-praven-kumar-won-silver-medal
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய