
முதல் தவணையாக அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியும், 2-வது தவணையாக பைசர் தடுப்பூசியும் போட்டுக்கொண்டால் கொரோனாவுக்கு எதிராக கூடுதல் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்று சுவீடன் நாட்டில் நடந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுக்காக சுமார் 7 லட்சம் பேர் பயன்படுத்தப்பட்டனர். 2 டோஸ் போட்ட பிறகு, அவர்கள் 2½ மாதங்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். இதில், 2 வெவ்வேறு தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா தாக்கும் ஆபத்து 67 சதவீதம் குறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
ஆனால், 2 தவணையும் அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி போட்டிருந்தால், நோய் அபாயம் 50 சதவீதம்தான் குறைவாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.