ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு : விண்ணப்பிக்க கடைசி தேதி 06 .01 .2021

ஆவின் நிறுவனத்தில் டெக்னீஷியன் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது .ஆவின் நிறுவனத்தில் திருப்பூர் கிளையில் உள்ள நேரடி நியமனம் மூலம் டெக்னீஷியன் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப உள்ளது .இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .இந்த அறிவிப்பானது 3223/TPR/Estt/2020-21 என்ற விளம்பரம் எண்ணின் கீழ் அறிவிப்பு வெளியாகியுள்ளது .

நிறுவனம் : Tirupur District Co-op.Producer’s Union Ltd

மொத்த காலியிடங்கள் : 13

பணி விவரம் :

Technician (Lab)-01
Technician(Electrical)-01
Technician(Refrigeration)-01
Technician(Operation) -01
Technician(Boiler)-01

தகுதி : 10th pass ,ITI ,Diploma

வயது வரம்பு : பொது பிரிவினருக்கு 30 வயதிற்குள்ளும் ,BC,MBC வகுப்பினருக்கு 32 வயதிற்குள்ளும் ,SC ,ST வயதினருக்கு 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும் .

மாத சம்பளம் :Rs.19,500-62,000

Light vehicle Driver -03
Heavy vehicle Driver -05

வயது வரம்பு : பொது பிரிவினருக்கு 30 வயதிற்குள்ளும் மற்ற பிரிவினருக்கு வயது உச்ச வரம்பு கிடையாது .

மாத சம்பளம் :Rs.19,500-62,000

தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்த பட்சம் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் .

விண்ணப்பக் கட்டணம் : ரூ .250 கட்டணத்தை எதாவது ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வரைவோலையாக எடுத்து அதை திருப்பூரில் மாற்றத்தக்க வகையில் General Manager,The Tirupur District Co-operative milk Producers (TDCMPU),Tirupur என்ற பெயருக்கு வரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும் .

தேர்வு செய்யப்படும் முறை : கல்வித் தகுதி மற்றும் நேர்முகத்தேர்வில் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .

விண்ணப்பிக்கும் முறை : தகுதியான விண்ணப்பதாரர்கள் www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தினை ,தேவையான சான்றிதழ் நகலுடன் இணைத்து கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் .

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்பவேண்டிய அஞ்சல் முகவரி :The General Manager ,Tirupur District Cooperative Milk producers Union ltd..,Veerapandy pirivu,Palladam road ,Tirupur – 641 605.

Next Post

ஐபிஎல் போட்டியில் 2022 முதல் 10 அணிகள் இடம்பெறும் : பிசிசிஐ முடிவு

Thu Dec 24 , 2020
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் தற்போது 8 அணிகள் விளையாடிய நிலையில் மேலும் இரு அணிகளை கூடுதலாக சேர்ப்பதற்கு குறித்து பிசிசிஐ கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளது .ஐபிஎல் கிரிக்கெட் போட்டியானது 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது ,அன்று முதல் இன்று வரை ரசிகர்களின் பேராதரவானது தொடர்ந்து கிடைத்து வருகிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் பொதுக்கூட்டமானது ஆமதாபாத்தில் இன்று நடைபெற்றது .இக்கூட்டத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மேலும் இரண்டு அணிகளை சேர்ப்பதற்கான […]
BCCI-2020-21
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய