ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் ஒற்றை தவணை வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் : ஆய்வில் தகவல்

நாடு முழுவதும் கொரோனா நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் தடுப்பூசிகள் குறித்து பல ஆராய்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் ஒற்றை தவணையே நல்ல பலன் தருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் ஒற்றை தவணை அளித்தபோது, அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. வைரஸை எதிர்த்து போராடுவதற்கான போதுமான வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் ஒற்றை தவணையே தருவதாக கூறப்படுகிறது.

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் ஆய்வு முடிவுகள் ஜூலை 13 -ல் வெளியிடப்பட்டுள்ளது .இதில் தடுப்பூசியின் ஒற்றை தவணையே நல்ல பலன் தருவதாக கூறப்பட்டுள்ளது.மேலும் மற்ற தடுப்பூசிகளின் ஒற்றை தவணையின் பயன்பாடு குறித்தும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக,அஸ்ட்ராஸெனகா தடுப்பூசியின் ஒற்றை தவணை 76 விழுக்காடு பயன் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், ஸ்புட்னிக்-வி தடுப்பூசி செலுத்திய மூன்றே வாரத்தில் 94 விழுக்காடு பயன் அளிக்கிறது என்று மூத்த விஞ்ஞானி ஆண்ட்ரியா கமர்னிக் கூறியுள்ளார்.

Next Post

ஜேஇஇ மெயின் நான்காம் கட்ட தேர்விற்கான தேதி மாற்றம் - மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு ..

Fri Jul 16 , 2021
கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக நாடு முழுவதும் நடைபெற இருந்த பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.இதில் ஜேஇஇ மெயின் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். ஜேஇஇ மெயின் தேர்வு ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படுகிறது. தற்போது,நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத் தொடங்கியதையடுத்து ஜேஇஇ மெயின் தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜேஇஇ மெயின் மூன்றாம் கட்ட தேர்வு ஜூலை […]
JEE-MAIN-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய