
“இல்லம் தேடி கல்வி” என்ற புதிய திட்டத்திற்கான விழிப்புணர்வு வாகனங்களை பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று துவங்கி வைத்துள்ளார்.
1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் குறைபாடுகளைப் போக்க, இல்லம் தேடிக் கல்வி என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில்,தற்போது இத்திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் கற்றல் குறைபாடைப் போக்க இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.இந்நிலையில், 1-8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் குறைபாடைப் போக்க, அவர்களின் இல்லங்களுக்கே சென்று பாடம் நடத்தும் “இல்லம் தேடிக் கல்வி” திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சென்னையில் இன்று தொடங்கி வைத்துள்ளார்.
1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் தஞ்சை , திருச்சி . கடலூர் உட்பட 12 மாவட்டங்களில் வீடு தேடி பள்ளி என்ற மாலை நேர கல்வி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இல்லம் தேடி கல்வி திட்டம் தொடர்ந்து 6 மாத காலத்திற்கு செயல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். மேலும் இல்லம் தேடி கல்வி திட்டம் மூலம் கற்றல் இடைவெளியை குறைக்க இயலும் எனவும் , இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் மாலை 5 மணி முதல் 7 மணி வரை மாணவர்களை மையங்களுக்கு அனுப்ப வேண்டும் தெரிவித்தார்.