
தமிழகத்தில் மூன்றாண்டு சட்டப் படிப்புக்கான (எல்.எல்.பி.) விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் தற்போது பெறப்பட்டு வருகிறது.மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வரும் நிலையில் அக்டோபர் 6-ஆம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சட்ட கல்லூரியில் ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கான ‘கட் ஆப்’ மதிப்பெண் பட்டியல் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு இணைய வழியில் சான்றிதழ் சரிபாா்ப்பு வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த பணிகள் வரும் 4ம் தேதி வரை நடைபெறும் என சட்டப் பல்கலை பதிவாளர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அக்டோபர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் இணையவழியில் கலந்தாய்வு நடைபெறும். மேலும் 9-ஆம் தேதி மாணவா் சோ்க்கை ஒதுக்கீடு உத்தரவு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதை பெறும் மாணவர்கள் அக்.11 முதல் 13-ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் எனவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.