
தமிழகத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு நவம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் செப். 1 முதல் 9,10,11,12 -ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா தொற்றும் அதிக அளவில் பரவவில்லை.
இந்நிலையில் சுகாதாரத்துறை, கல்வியாளர்கள், உயர் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பின்பு தற்போது, 1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன்படி வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. அதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிக் கல்வித்துறை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழக அரசு கொரோனா குறித்து அறிக்கை ஒன்டாரி வெளியிட்டுள்ளது,
- சமுதாய அரசியல் கலாசார நிகழ்வுகள், திருவிழாக்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.
- வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களும் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும்.
- கடைகளில் நுழைவு வாயிலில் வாடிக்கையாளர்களுக்கு உடல் வெப்ப நிலை கருவி கொண்டு பரிசோதிக்க வேண்டும்
- கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
- கடைகள் குளிர்சாதன வசதி இல்லாமல் இயங்க வேண்டும். சமூக இடைவெளியை அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.