
பள்ளிகளுக்கு புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவதற்கான 12 பேர் கொண்ட குழுவை மத்திய கல்வி அமைச்சகம் நேற்று அமைத்தது.இந்த குழுவிற்கு கஸ்தூரிரங்கன் தலைமையில் அமைப்பு உருவாக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.புதிய பாடத்திட்ட குழு தலைவரான கஸ்தூரிரங்கன் முன்னாள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய பாடத் திட்டக்குழுவில் தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிா்வாக நிறுவனத்தின் வேந்தா் மகேஷ் சந்திர பந்த், ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக துணைவேந்தா் நஜ்மா அக்தா், பஞ்சாப் மத்திய பல்கலைக்கழக வேந்தா் ஜக்பீா் சிங் உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ளனா்.இந்தக் குழு குழந்தைப் பருவக் கல்வி, பள்ளிக்கல்வி, உயா்கல்வி மற்றும் ஆசிரியா் கல்விக்கான புதிய பாடத்திட்டங்களை உருவாக்கவுள்ளது.
இந்த புதிய பாடத்திட்ட குழுவின் காலம் 3 ஆண்டுகளாக இருக்கும் என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.மேலும் புதிய பாடத்திட்டங்களை உருவாக்கும்போது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பாடத்திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் உள்பட சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரிடமும் பரிந்துரைகள் பெற்ற பிறகும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் பொது மற்றும் நிா்வாகக் குழுக்கள், மத்திய கல்வி ஆலோசனைக் குழு ஆகியவற்றுடனான கூட்டங்களுக்குப் பின்னரும் புதிய பாடத்திட்டங்கள் இறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.