
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதற்கான ரேண்டம் எண் மற்றும் கலந்தாய்வுக்கான தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் உள்பட 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. அவற்றில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஜூலை 26ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைன் வழியாக இதுவரை 1,74,171 பேர் விண்ணப்பம் அளித்துள்ளதாகவும், இவர்களில் 1,38,533 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து உள்ளனர் என்றும் பொறியியல் மாணவர் சேர்க்கை குழு கூறியுள்ளது.இதன் அடிப்படையில் கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு இன்று ரேண்டம் எண் வழங்கப்பட உள்ளது.
பொறியியல் கலந்தாய்வு செப்டம்பர் 7 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் 12 முதல் அக்டோபர் 16 வரை துணை கலந்தாய்வு நடைபெறும் எனவும், அக்டோபர் 20 க்குள் கலந்தாய்வை முடித்து விட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்றும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் கூறியுள்ளது.