
ஆண்டுதோறும் பள்ளிகள் ஜூன் மாதம் திறக்கப்பட்டு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நடத்தப்படுவது வழக்கமாகும்.அனால் கடந்த ஆண்டும் மற்றும் நடப்பாண்டில் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக வகுப்புகளை நடத்த முடியவில்லை.
2021- 22 கல்வியாண்டிலும் இதுவரை பள்ளிகள் திறக்கப்படாமல் 3 மாதங்கள் கடந்து விட்டன. மாணவர்களுக்கு அதற்கான பாடங்களை நடத்த முடியாததால் குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் கற்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பள்ளி கல்வித்துறை மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்ததும் அவர்களுக்கு புத்தாக்க பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் எவ்வாறு புத்தாக்க வகுப்புகளை நடத்த வேண்டும் என்று திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.இதுபற்றிய விவரங்கள் அனைத்தும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதை அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
புத்தாக்க பயிற்சி, மாணவர்கள் பயில்கின்ற வகுப்புக்கு முந்தைய 2 வகுப்புகளின் பாடங்களின் அடிப்படையில் 45 முதல் 60 நாட்களுக்கு கற்றுத்தரப்படும். பயிற்சி நிறைவு பெற்றவுடன் அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும்.
மாணவர்களுக்கு தேர்வானது முன்னுரிமை பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும். போட்டி தேர்வுகளுக்கு இதை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களே தன்னிச்சையாக தயாராகி கொள்ள வேண்டும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.