
தமிழக சட்டசபையில் இன்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
தமிழக சட்டப் பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லாத நிதிநிலை அறிக்கை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது.பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்களை பார்ப்போம்.
- தொல்லியல் துறைக்கு ரூ.29.43 கோடி நிதி ஒதுக்கீடு
- காவல் துறையிலுள்ள 1,33,198 பணியிடங்களில் காலியாக உள்ள 14,317 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை
- தீயணைப்புத்துறைக்கு ரூ.405.13 கோடி நிதி ஒதுக்கீடு
- தமிழக காவல்துறைக்கு மொத்தம் ரூ.8,930.29 கோடி நிதி ஒதுக்கீடு
- உணவு மானியத்திற்கான நிதி ரூ.8,437.57 கோடியாக உயர்வு
- மீன்வளத்துறைக்கு ரூ.303.66 கோடி நிதி ஒதுக்கீடு
- மீனவர்கள் நலனுக்கு 1,149.79 கோடி ரூபாய் ஒதுக்கீடு
- புதிதாக 6 மீன்பிடி துறைமுகங்கள் அமைக்க ரூ.6.25 கோடி செலவில் ஆய்வு மேற்கொள்ளப்படும்
- சென்னையில் உள்ள காசிமேடு துறைமுகத்தை மேம்படுத்த ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு.
- 2010-ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் உள்ள ‘செம்மொழி தமிழ் விருது’ இனி ஆண்டுதோறும் ஜூன் 3-ம் தேதி வழங்கப்படும்.
- ரூ.400 கோடி ஒதுக்கீட்டில் தூய்மை பாரதம் இயக்கம் செயல்படுத்தப்படும்
- 100 நாள் வேலைவாய்ப்பை 150 நாட்களாக உயர்த்த வலியுறுத்தப்படும்.
சிங்கார சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்படும்; ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். - சீர்மிகு நகர திட்டத்திற்கு ரூ.2,350 கோடி ஒதுக்கீடு; அம்ருத் திட்டத்திற்கு ரூ.1,450 கோடி ஒதுக்கீடு
- கிருஷ்ணா நதிநீரை சென்னை நீர் தேக்கங்களுக்கு குழாய் மூலம் கொண்டு வர சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்
- நமக்கு நாமே திட்டத்தில் சிறப்பான பங்களிப்பவர்களுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும்
- மண் சாலைகள் அனைத்தும் தரம் உயர்த்தப்படும்; நகரங்களில் 30 மீட்டர் இடைவெளியிட்டு தெருவிளக்குகள் அமைக்கப்படும், நீர்நிலைகளை மீட்டெடுக்க ரூ.300 கோடி ஒதுக்கீடு என கூறினார்.
சென்னைக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் முக்கிய திட்டங்கள் என்னென்ன ?
- சென்னையில் 3 இடங்களில் ரூ.335 கோடியில் புதிய மேம்பாலங்கள் அமைக்கப்படும். அதன்படி, சென்னையில் கணேசபுரம் சுரங்கப்பாதை, கொன்னூர் நெடுஞ்சாலை, தெற்கு உஸ்மான் சாலை என மூன்று இடங்களில் ரூ.335 கோடியில் புதிய மேம்பாலங்கள் கட்டப்படும்.
- சிங்கார சென்னை 2.0 திட்டம் தொடங்கப்படும்.
- சென்னையுடன் இணைந்த பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்துக்கு ரூ.2,056 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
- சென்னை மாநகரத்தில், பொது இடங்களில் சுவரொட்டிகள் இல்லாத நகரமாக சென்னை மாற்றப்படும்.
- சென்னையில் 3 புதிய மேம்பாலங்கள்
- சட்டமன்ற உறுப்பினர் தொகுதிநிதி ரூ.3 கோடியாக மீண்டும் அளிக்கப்படும்.
- ரூ.100 கோடியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிமுகப்படுத்திய நமக்கு நாமே திட்டம் மீண்டும் துவக்கப்படும்.
- சென்னையில் கணேசபுரம் சுரங்கப்பாதை, கொன்னூர் நெடுஞ்சாலை, தெற்கு உஸ்மான் சாலை என மூன்று இடங்களில் ரூ.335 கோடியில் புதிய மேம்பாலங்கள் கட்டப்படும்.