காலநிலை மாற்றம் மனித இனத்திற்க்கான எச்சரிக்கை : ஐ.நா அறிக்கை வெளியீடு..

சமீப நாட்களாக பல்வேறு நாடுகளில் வெள்ளம், காட்டுத் தீ ஏற்பட்டது குறித்து செய்திகள் தினமும் நம்மிடையே வெளிவந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்த புகைப்படங்கள் நமக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளன.

குறிப்பாக இந்தியா, சீனா , வட ஐரோப்பா ஆகிய நாடுகளில் பெரு வெள்ளம் உருவாகியுள்ள நிலையில், வட அமெரிக்க மற்றும் தெற்கு ஐரோப்பாவில் வெப்ப அலைகள் ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்தியில், ஐ.நாவின் அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இவை எதிர்காலத்தில் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்த அறிக்கையை ஐக்கிய நாடுகள் காலநிலை அறிவியல் குழு இன்று (திங்கள்கிழமை) வெளியிட்டுள்ளது.

  • உலகம் அதிவேகமாக வெப்பமடைந்து வருகிறது.
  • அந்தவகையில், 2018ஆம் ஆண்டு கணிக்கப்பட்டதுபோல் அல்லாமல் 10ஆண்டுகளுக்கு முன்பாகவே 2030ஆம் ஆண்டுக்குள், உலகளாவிய வெப்பம் 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • கடல் மட்டம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
  • 1901 முதல் 1971 வரையிலான காலக்கட்டத்தில் ஆண்டுக்கு, சராசரியாக 1.3 மில்லிமிட்டர் அளவு உயர்ந்த கடல்மட்டம், 2006 முதல் 2018 வரை, 3.7 மில்லிமிட்டர் அதிகரித்துள்ளது.அதாவது கடல் மட்டம் இரண்டு மடங்கு வேகமாக உயர்ந்துள்ளது.
  • 1950களிலிருந்து வெப்ப அலைகள் உள்பட வெப்பத்தின் தீவிரம் அதிகரிப்பது அடிக்கடி நிகழ்ந்துள்ளது. குறிப்பாக, நிலபரப்புகளில் அதன் நிகழ்வு அதிகமாக இருந்துள்ளது. இதற்கு நேர்மாறாக, குளிரின் அலைகள் உள்பட குளிரின் தீவிரம் நிகழ்வது வெகுவாக குறைந்துள்ளது.
  • இந்த வகையான மாற்றங்கள் மனிதர்களின் நடவடிக்கைகளால் நிகழ்ந்துள்ளன என கூறப்பட்டுள்ளது.
  • தற்போது நகரங்கள் உலக வெப்பமயமாதலின் மையமாக திகழ்கின்றன. பசுமை இல்ல வாயுக்கள் அதிகமாக இருப்பதாலும் நீர்நிலைகள், தாவரங்கள் ஆகியவை குறைவாக உள்ளதாலும் நகரங்களில் வெப்பமயமாதல் அதிகமாக உள்ளது
  • பத்தாண்டுகளுக்கு ஒரு முறை, 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் கனமழை, வறட்சி ஆகியவை அடிக்கடி நிகழ்ந்துள்ளது.அதன் தீவிரத்தன்மையும் அதிகரித்துள்ளது.
  • தீவிர வானிலை நிகழ்வுகளால் ஏற்படும் தாக்கங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.இவை பல்வேறு இடங்களில் பல மாதிரியாக சேர்ந்து நிகழவும் வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.
  • குறிப்பிட்ட தீவிரமான நிகழ்வுகளின் காரணத்தை கண்டிபிடிப்பது மிக கடினமாக உள்ளது. இருப்பினும், மனிதர்களின் செயல்களால் எந்தளவு தாக்கம் ஏற்படுகிறது என்பது குறித்து விஞ்ஞானிகள் கூறலாம்.
  • காலநிலை மாற்றமும் தரமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாகும். இவ்விரண்டு பிரச்னைகளையும் ஒன்றாக எதிர்கொண்டால் பொருளாதார ரீதியாக நல்ல பலன் கிடைக்கும்.
  • புதைபடிவ எரிபொருள்களை பயன்படுத்துவதை குறைத்தல் பச்சை வீட்டு வாயுக்கள் வெளிப்பாட்டை குறைத்தல் போன்றவற்றில் உடனடியான தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொண்டால் மட்டுமே இந்த நூற்றாண்டிலேயே உலக வெப்பமயமாதலை கட்டுப்படுத்த முடியும்.

Next Post

திருக்குறளிலுள்ள 1330 குறள்களையும் ஒப்பித்தால் கல்லூரியில் பட்டப்படிப்பு இலவசம்..

Mon Aug 9 , 2021
தமிழகம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சோ்ந்த பிளஸ் 2 மாணவ, மாணவிகள் திருக்குறளிலுள்ள 1330 குறள்களையும் ஒப்பித்தால் அவர்களுக்கு பி.ஏ.தமிழ் இளங்கலை வகுப்பு மூன்றாண்டுகளுக்கும் இலவசமாக கற்றுக்கொடுக்கப்படும் என்று கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி இயக்குனர் தெரிவித்துள்ளார். இது குறித்து கல்லூரி இயக்குனர் கூறுகையில், நாட்டின் இளையத் தலைமுறையினரை வள்ளுவன் காட்டிய வழியில் வாழ்ந்து அறிவாா்ந்த சமுதாயமாக மாற்றும் நோக்கத்தில், எந்தவித எதிா்பாா்ப்பும் இல்லாமல் எங்கள் […]
Karur-arts-and-science-college-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய