தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 246 பேரும், சென்னையில் 204 பேரும், ஈரோட்டில் 165 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 150-க்கும் குறைவான பாதிப்புகளே பதிவாகியுள்ளன.
இன்றைய நிலவரப்படி 20,716 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.மாநிலத்தில் மொத்தம் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 25,59,597 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 26 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 28 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,076-ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்

