நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக இருந்த பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 44,230 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 3,15,72,344 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,23,217 ஆக உள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,07,43,972 ஆக உள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,05,155 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் இதுவரை 45,60,33,754 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வந்தாலும், கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.