
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டதால் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது.மேலும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் பாரதியார் பல்கலைக் கழகத்தில் இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு இணைய வழி மூலம் நடத்தப்பட்ட செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் இளங்கலை இறுதி ஆண்டு மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.தேர்வு முடிவுகளில் சில மாணவர்களுக்கு ஆப்சென்ட் என்று குறிப்பிடப்பட்டுள்ளது மாணவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து விளக்கமளித்த தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, விடைத்தாள்கள் முறையாக பதிவேற்றம் செய்யாத மாணவர்கள், போதிய வெளிச்சம் இல்லாமல் விடைத்தாளை புகைப்படம் எடுத்து பதிவேற்றிய மாணவர்களுக்கு, மதிப்பீடு செய்ய முடியாமல் ஆப்சென்ட் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்று விளக்கமளித்துள்ளார்.