![](https://tamil.aptinfo.in/wp-content/uploads/2021/07/Higer-education-admission-2021.jpg)
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூலை 26ந் தேதி முதல் ஆகஸ்ட் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
மேலும், கல்லூரி சேர்க்கைக்கான விண்ணப்பம் வழங்குவதற்கான ஏற்பாடு அனைத்து கல்லூரிகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், கவுரவ விரிவுரையாளர்களுக்கான தேர்வு நிறுத்தப்பட்டிருந்தாலும் அவர்கள் பணியில் தொடரலாம் என்றும் உயர்கல்வி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனிடையில், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் ஜூலை 31-ந் தேதி வெளியாக உள்ளதால் மாணவர்கள் கல்லூரிகளில் சேர கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.