
நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு உடல் சோர்வு, மூச்சு திணறல், தசை வலி, இருமல், மூட்டு வலி, நெஞ்சுவலி, வாசனை உணராமை, வயிற்றுப்போக்கு, சுவையின்மை ஆகியவை அறிகுறிகளாக சொல்லப்பட்டன.
கொரோனா அறிகுறிகள் தொடர்பாக இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். ஆய்வின் முடிவுகளை ராயல் சொசைட்டி ஆப் மெடிசின் என்ற பத்திரிக்கையில் வெளியிட்டனர்.ஆராய்ச்சியின் முடிவில் கொரோனா பாதிப்புக்கு 5-க்கும் மேற்பட்ட அறிகுறிகளுடன் ஒருவர் ஆளாகிறபோது, அவர் மாதக்கணக்கில் கொரோனா தொற்றினால் மோசமாக அவதிப்பட நேரிடும் என்று தெரியவந்துள்ளது.
குறிப்பாக ஒருவருக்கு உடல் சோர்வு, தலைவலி, மூக்கு ஒழுகுதல், இருமல், நாசி நெரிசல் ஆகியவற்றுடன் சுவாச கோளாறு இருந்தால் நீண்ட காலம் கொரோனா பாதிப்பு இருக்கும் என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கினர், கொரோனாவால் 8 வாரங்களுக்கு மேலாக மோசமாக பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளனர்.