
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டது.தமிழகத்தில் வருகிற 5-ந்தேதி உடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நிறைவடைகிறது.இந்நிலையில் ஊரடங்கு குறித்து இன்று தமிழக முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் தமிழகத்தில் மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை 12 ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜூலை 5ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் இனி 8 மணி வரை இயங்கலாம்.
- உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை 50% பேர் மட்டுமே அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- தேநீர் கடைகளில் நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றி 50% வாடிக்கையாளர்களுக்கு அனுமதி.
- பள்ளிகள், கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.
- திரையரங்குகள், நீச்சல், குளங்கள், அரசியல் கூட்டங்களுகு தடை நீடிக்கிறது.
- மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ், இ-பதிவு முறை தேவையில்லை என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.