![](https://tamil.aptinfo.in/wp-content/uploads/2021/06/Admission-for-school-students.jpg)
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.கொரோனா தொற்று காரணமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பரவல் காரணமாக நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற வேண்டிய மாணவர் சேர்க்கை பாதிக்கப்பட்டது.இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வருகிற 14-ந் தேதி முதல் தொடங்குவதற்கான நடைமுறைகளை பள்ளி கல்வித்துறை தீவிரமாக செய்து வருகிறது . தலைமை ஆசிரியர்கள், ஊழியர்கள் வருகிற 14-ந் தேதி பள்ளியில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் காரணமாக மாணவர் சேர்க்கை முறையாக நடைபெறாத காரணத்தினால் வருகிற 14-ந் தேதி முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான ஆயத்த பணிகளை செய்ய வேண்டும்.மேலும் தலைமை ஆசிரியர், நிர்வாக ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் பள்ளியில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ்-1 மாணவர் சேர்க்கையானது வருகிற 21-ந் தேதியில் இருந்து தொடங்க உள்ள நிலையில் மற்ற வகுப்புகளுக்கும் மாணவர்களை சேர்ப்பதற்கும், சத்துணவு சாப்பிடக்கூடிய மாணவர்களுக்கு அதற்கான உணவு பொருட்களை வழங்கவும், பள்ளிக்கு ஆசிரியர்கள் வர வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அரசு பள்ளிகளில் சுமார் 5 லட்சம் மாணவர்கள் கடந்த ஆண்டு கூடுதலாக சேர்க்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.