
இந்தியாவில் கொரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வந்ததன் காரணமாக பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.இதன் காரணமாக தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது,மேலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தற்போது உயர்ந்துகொண்டே வருகிறது.
இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 1,32,788 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மொத்த பாதிப்பு 2,83,07,832 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 3,207 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,61,79,085 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,35,102 ஆகும் .நேற்று ஒரே நாளில் கொரோனா பிடியிலிருந்து 2,31,456 பேர் குணமடைந்துள்ளனர்.மேலும் உயிரிழப்பு 1.18 சதவீதமாகவும், குணமடையும் விகிதம் 92.48 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனவுக்காக 17,93,645 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 21,85,46,667 டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.