தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் படுக்கை மற்றும் ஆக்ஸிஜன் வசதி பெற தமிழக அரசு புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு படுக்கை கிடைக்காத நோயாளிகளை உடனே கண்டறிந்து அவர்களுக்கான தேவையை உடனே வழங்கிட புதிய இணையதளத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
இணையதளத்தில் கேட்கப்பட்ட விவரங்களை பதிவு செய்தால் வார் ரூம்மிற்கு உடனே தகவல் சென்று ஒருங்கிணைக்கப்பட்டு உடனே படுக்கை வசதி கிடைக்க வழி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Covid19-War-Room ….https://ucc.uhcitp.in/publicbedrequest