
கொரோனவை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பூசி மருந்துகள் இப்போது நடைமுறையில் வந்த வண்ணம் உள்ளன.பலரும் தடுப்பூசி மருந்துகளை செலுத்தி வருகின்றனர்.தற்போது இந்தியாவில் மட்டும் 14 .78 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
பைசர் நிறுவனம் தற்போது கொரோனாவுக்கு எதிராக எதிர்ப்பு சக்தியை அதிக அளவில் உருவாக்கும் வகையில் இரண்டு தடுப்பூசி மருந்துகளை உருவாக்கி வருகிறது .இதில் ஒன்று ஊசி மூலம் செலுத்தும் மருந்து, மற்றொன்று வாய் வழியாக உட்கொள்ளக்கூடிய மருந்தாகும்.
தற்போது பல்வேறு நிறுவனங்கள் வாய் வழியாக உட்கொள்ளும் கொரோனா தடுப்பூசி மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.இதனைத் தொடர்ந்து பைசர் நிறுவனம் வாய் வழியாக உட்கொள்ளும் மருந்தை உருவாக்கும் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும், அடுத்த ஆண்டு வாய் வழியாக உட்கொள்ளும் மருந்து தயாராகிவிடும் என்று பைசர் நிறுவன தலைமை அதிகாரி செய்தி குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும், வாய் வழியாக உட்கொள்ளும் மருந்து பல நன்மைகளை வழங்குவதாகவும்,இதனை வீட்டில் வைத்தே உட்கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.