
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக மே 5 ஆம் தேதி நடக்கவிருந்த பொதுத் தேர்வு தேதி திடீரென தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் வரும், 25ம் தேதி முதல் மீண்டும் இலவச நீட் பயிற்சியை துவங்க, பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
பல அரசு பள்ளி மாணவர்கள், எளிதாக மருத்துவ படிப்பில் சேரும் வகையில் மாநில அரசு மருத்துவ இடங்களில், 7.5 சதவீதம் இடத்தை ஒதுக்கியுள்ளது.
மேலும் மருத்துவ ஒதுக்கீட்டில் சேர உள்ள மாணவர்களுக்கு, அரசு சார்பில் இலவச நீட் பயிற்சி ஆன்லைன் வழியாக நடத்தப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில், 5,000க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் இந்த பயிற்சியை மேற்கொண்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளதால்,வரும், 25ம் தேதி முதல், மீண்டும் இலவச நீட் பயிற்சியை துவங்க, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.இதற்கான அறிவிப்புகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வழியே, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.