
2068ம் ஆண்டு அபோபிஸ் என்ற சிறுகோளானது பூமியைத் தாக்கும் என பல வதந்திகள் சில மாதங்களாவே பரவி வருகின்றன.இதனால் மனித இனம் அழிய நேரிடும் எனவும் கூறப்பட்டது.,பல குழப்பங்களும் அச்சங்களும் அனைவரின் மத்தியில் நிலவி வருகிறது.இக்குழப்பமான நிலைக்கு நாசா விளக்கம் ஒன்றை அளித்துள்ள்ளது.
நாசா விண்வெளி அமைப்பானது, 2068 ஆம் ஆண்டு அபோபிஸ் என்ற சிறுகோளானது பூமியைத் தாக்கும் என்ற கூற்றை நிராகரித்துள்ளது.மேலும்,நூறு ஆண்டு காலத்திற்கு எந்தவொரு அபாயகரமான விண்வெளி பாறையும் பூமியை தாக்காது எனவும் தெரிவித்துள்ளது.
நாசா அமைப்பானது,ஒரு புதிய துல்லியமான சுற்றுப்பாதை பகுப்பாய்வோடு இணைக்கப்பட்ட ரேடாரைக் கொண்டு 2068 மற்றும் நீண்ட காலத்திற்கு இந்த அபோபிஸ் என்ற சிறுகோளால் எந்தவொரு பாதிப்போ அல்லது அபாயமோ ஏற்படாது என்பதைக் கண்டறிந்தது.மேலும்,நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் வெளியிட்ட அறிக்கையில், 2068-ல் சிறுகோளின் பாதிப்பு சாத்தியம் இல்லை. மற்றும்,குறைந்தது அடுத்த 100 ஆண்டுகளுக்கு எந்தவிதமான தாக்க அபாயத்தையும் காட்டவில்லை என கூறியுள்ளது.
அபோபிஸ் என்ற சிறுகோளானது 2004 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இது சுமார் 340 மீட்டர் அகலம் கொண்டது,மேலும் இவை மூன்றரை கால்பந்து மைதானங்களின் அளவுக்கு இணையானது என்றும் கூறப்பட்டுள்ளது.இந்த சிறுகோள் 2029 ஆம் ஆண்டில் பூமியை நெருங்கி வரும் என்றும்,பூமிக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தனர்,ஆனால் பூமிக்கு அருகிலுள்ள பொருளின் (NEO) கூடுதல் கண்காணிப்புகளுக்கு பிறகு அபோபிஸ் என்ற சிறுகோள் பூமியை தாக்கும் என்ற கூற்று நிராகரிக்கப்பட்டது.