
இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்தாலும் கொரோனாவின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 15,388 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .
இன்று காலை நிலவரப்படி இந்தியா முழுவதும் புதிதாக 15,388 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது .இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,12,44,786 ஆக அதிகரித்துள்ளது .தற்போது இந்தியாவில் கொரோனாவின் தாக்கமானது தீவிரத்தை அடைந்து வருகிறது .
ICMR (இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின்) புள்ளிவிவரப்படி ,இதுவரை கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,08,99,394 ஆக உள்ளது.கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,57,930 ஆகும் .
நாடு முழுவதும் தற்போது கொரோனவுக்காக 1,87,462 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது .