
9,10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி பெற்றுள்ளதாக தமிழக முதல்வர் பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கொரோன தொற்றின் காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கமானது அறிவிக்கப்பட்டது .பொதுமுடக்கத்தின் காரணாமாக பள்ளிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன .
இந்நிலையில் பொதுமுடக்கத்தால் மூடப்பட்ட பள்ளிகள் இந்தாண்டு ஜனவரியில் மீண்டும் திறக்கப்பட்டன .வகுப்புகள் நடைபெற்றிருக்கும் நிலையில் பொதுத்தேர்வு எப்போது ,எப்படி நடைபெறும் என்ற அறிவிப்பானது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது ,இந்நிலையில் பொதுத் தேர்வின்றி மாணவர்கள் தேர்ச்சி பெறுவதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
மேலும் , பொதுத்தேர்வுகள் குறித்து ஆலோசனைககள் நடைபெற்று வந்த நிலையில் ,தமிழக சட்ட பேரவையில் இன்று விதி 110 -ன் கீழ் உரையாற்றிய முதல்வர் ,தமிழகத்தில் 9 ,10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பொதுத்தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெறுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் .