எலிகளிடம் பரவும் 3 வகை கொரோனா வைரஸ்கள் : ஆய்வில் தகவல்

நாடு முழுவதும் கொரோனா வைரஸானது பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.இதில் சில வகை வைரசுகள் அதிகம் வீரியம் கொண்டதாக மாறி மனிதர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.

குறிப்பாக ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா வகை வைரசுகள் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. மேலும் இந்த வகை வைரஸ்கள் விலங்குகளையும் தாக்குமா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்த ஆய்வை காமன்வெல்த் அறிவியல் தொழில் ஆராய்ச்சி அமைப்பு, ஆஸ்திரேலியாவில் உள்ள தேசிய சயின்ஸ் ஏஜென்சி ஆகியவை இணைந்து மேற்கொண்டது.

இந்த ஆய்வில் ஆல்பா, பீட்டா, காம்மா வைரசுகள் எலியை தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதே நேரத்தில் டெல்டா வைரசால் எலிகளை தாக்க முடியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.ஆடு, மாடுகள், குதிரை போன்ற விலங்குகளை கொரோனா வைரஸ் தாக்கினால் தடுப்பூசி மூலமோ அல்லது அவற்றை அழிப்பதன் மூலமோ கட்டுப்படுத்தி விடலாம். ஆனால் எலிகளுக்கு பரவினால் அதை கட்டுப்படுத்துவது கடினம்

கொரோனா வைரசின் தன்மை தொடர்பாக நூற்றுக்கணக்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ,இதில் எலிகளுக்கு பரவுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எனவே இதனை தடுப்பது தொடர்பாக ஆய்வு தற்போது நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Post

குழந்தைகளுக்கு செப்டம்பரில் கொரோனா தடுப்பூசி : தேசிய வைராலஜி மையம் அறிவிப்பு ..

Thu Aug 19 , 2021
இந்தியாவில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி வருகிற செப்டம்பர் மாதம் கிடைக்க வாய்ப்புள்ளதாக தேசிய வைராலஜி மையம் தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசி இயக்கம் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக 18 வயதுக்குட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பாரத் பயோடெக்கின் கோவேக்சின், சைடஸ் காடில்லா நிறுவனத்தின் ‘சைகோவ்-டி’ ஆகிய இரு தடுப்பூசிகளும் பரிசோதனையில் இருந்து வருகின்றன. இதில், கோவேக்சின் 525 பேரிடமும், சைகோவ்-டி […]
covid-vaccine-for-child
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய