தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் இன்று வெளியீடு..

தமிழகத்தில் 2020-21 ஆம் ஆண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா தொற்று பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் இன்று ( ஆகஸ்ட் 23) இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

மாணவர்கள் உயர்கல்வியில் சேர 12ஆம் வகுப்பு மதிப்பெண் அவசியம் என்பதால் 10 மற்றும் 11ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு கடந்த ஜூலை மாதம் 19 ஆம் தேதி ஆன்லைன் மூலமாக வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி அரசு வெளியிட்ட அறிவிப்பின் படி, 10 ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று (ஆகஸ்ட் 23) இணையத்தில் வெளியிடப்படும் என்றும்,மேலும் இன்று காலை 11 மணி அளவில் மதிப்பெண் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்படும் எனவும் தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை தேர்வு துறையின் அதிகாரபூர்வ இணையதளமான www.dge.tn.gov.in என்ற முகவரியில் பதிவு எண், பிறந்த தேதி, ஆகிய விவரங்களை பதிவு செய்து சான்றிதழ்களை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.மேலும் அணைத்து பள்ளிகளும் தற்காலிக சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Next Post

அரசு கலைக் கல்லூரிகளில் முதுகலைப் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..

Mon Aug 23 , 2021
தமிழகத்தில்‌ உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் முதுகலைப் படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்குநர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள முதுகலைப் படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tngasapg.org, www.tngasapg.in என்ற இணையதள முகவரியில்‌ பதிவு செய்யலாம்‌ என்று கல்லூரி இயக்ககம் தெரிவித்துள்ளது. இணையதளம் வழியாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் கல்லூரி உதவி மையங்கள்‌ மூலம்‌ விண்ணப்பிக்க […]
arts-and-sience-pg-admision-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய